09 September, 2010

ஆயினும் ஆறுதல்

நெருக்கித் தள்ளி வாழ்வு விதிர்விதிர்த்துத்
தளும்புகிற கணங்களைத்
துடைத்துவிடும்படிக்கு உகுக்கிறான்
மூன்றரை வயதான கபிலன்
ஆறுதல்தான் என்று தெரியாமல்
வார்த்தைகளை
''இந்தா அப்பா தண்ணி குடி''
எனினும் அதனால் ஒன்றும்
ஆகவில்லைதான்
ஆயினும் ஆகியிருந்திருப்பின்கூட
இந்தளவு ஆறுதலடைந்திருக்க
மாட்டார் அப்பா

நன்றி: உயிரோசை (27.09.10)


1 comment:

உயிரோடை said...

அருமையான‌ ஆறுத‌ல். ந‌ல்ல‌ க‌விதை