12 May, 2011

புத்தனின் கனவு

கால் புதைய கனிந்திருக்கும்
அந்த நிலத்தின் அந்தரங்கத்துள்
புதைத்து வைத்திருக்கிறான்
புத்தன் தன் கனவினை

கிளைகளற்ற தருவாக
காய்த்து இறுகிய மலையாக
குளிர்பொருந்திய ஊற்றாக
விடம் கக்கும் பாம்பாக
மேலும் எதுவாகவும்
வெளிப்படலாம் எதிர்பாராதருணத்தில்

கனவுக்கும் புத்தனுக்குமான இடைவெளியில்
ஏக்கம் தொனிக்கக் காத்திருக்கிறது
சலனிக்காத கர்ப்பக் குளத்து இரவு

நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011

3 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை.

//எதுவாகவும்
வெளிப்படலாம் எதிர்பாராதருணத்தில்//

அருமை.

rvelkannan said...

//எதுவாகவும்
வெளிப்படலாம் எதிர்பாராதருணத்தில்//
காத்திருப்பு புத்தனை புரிய வைக்கிறது
அருமை கதிர்,

Thenammai Lakshmanan said...

விடம் கக்கும் பாம்பாக..?? ஏன்..கதிர்