23 February, 2012

லேகியம்

கிருஷ்ணாபுரத்து ரதியின்
திண்முலை குவிமையத்தில்
மூக்குரசி நைச்சியம் செய்கிறது
கரும்புக்காட்டிலிருந்து மன்மதன்
தூதனுப்பிய சிட்டொன்று.
புரிந்துகொண்டு
அபிநயிக்கும் பாவனையில்
மார்க்கச்சையை நெகிழவிடுகிற
ரதியிடம் பெற்றுக்கொள்ளுங்கள்
சிட்டுக்குருவி லேகியம்

No comments: