29 May, 2014

புதுமையாக சிந்திக்கவும், கவித்துவமாக எழுதவும் செய்கிறார் கதிர்பாரதி. - கவிஞர் கரிகாலன்

சிறிய இடைவெளிக்குப் பிறகு கவிதை படிக்கத் தொடங்கி இருக்கிறேன். நல்வாய்ப்பாக என்னை ஏமாற்றாமலிருந்தது கதிர்பாரதியின் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள். புதுமையாக சிந்திக்கவும், கவித்துவமாக எழுதவும் செய்கிறார் கதிர்பாரதி. கவித்துவ அமைதிகூடிய கதிர்பாரதியின் கவிதைகள் இந்த கோடையின் வெம்மையை சில இடங்களில் கூட்டியும், எதிர்பாராது பெய்த மழையைப் போல குளிர்ச்சியையும் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. நெடுஞ்சாலை மிருகம் என்கிற அவரது கவிதை இப்படி முடிகிறது. 

பருவபெண்ணின் நளினத்தோடு
வளைகிற ஒவ்வொரு திருப்பத்திலும்
அவளின் வனப்பையொத்த மினுமினுப்புகளில்
வீச்சமெடுக்கும் ரத்தத்தை
உதறிக்கொண்டு ஓடுகிறது
காலம்.

விளைநிலங்களை அழித்து மரங்களை வெட்டி வளர்ச்சியின் பொருட்டு உருவான நமது தங்க நாற்கரச் சாலைகள் இலக்கு நோக்கி விரைகின்ற வேளையில் அதுகேட்கும் பலிகளை நாள்தோறும் ஊடகங்களில் சாப்பிட்டபடி பார்க்கிறோம்.
எல்லாவித வன்முறைகளுக்கும் பழகிக்கொண்டது நமது மனது.

இளம் வயதில் கதிர்பாரதி யுவபுரஸ்கார் விருது, கலை இலக்கியப் பெருமன்ற விருது, ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது போன்ற பெருமைகளைப் பெற்றுள்ளார். தொடர்ந்து, இயங்கி சிறந்த கவி ஆளுமையாக அவர் மலர வாழ்த்துகள். இத்தொகுப்பு குறித்த விரிவான அபிப்ராயத்தை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.

No comments: